Monday 1 February 2010

ஆஸ்மாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?

1. 6மிடம் புதனும் சந்திரனும் சம்பந்தப்பட்டால
           மன அழுத்தம் பாதிக்கப்படும் அதனால் ஆஸ்துமா அதிகமாகும் நிறைய கோழைகள் (திரவங்கள்) உற்பத்தியாகி வெளியேறும். நோய்கிருமிகள் தொற்ற காரணமாகும்.

2. 6மிடம் புதனும் சூரியனும் சம்பந்தப்படுமானால்
          ஆஸ்துமாவினால் இருமும்போது வாயின் உட்புறத்தில் மேல் பகுதியில் காற்று வேகமாக மோதும். இப்படி தொடர்ச்சியாக இறுமும் போது வாயின் மேல் அன்னம் பகுதியில் உள்ள நரம்புகளின் மீதும் ரத்தக் குழாய்களின் மீதும தொடர்ச்சியாக காற்று மோதுவதால் தலை வலி உருவாகும்.

3. 6மிடம் புதனும் செவ்வாயும் சம்பந்தப்படுமானால்
          தொடர்சியாக இருமுவதால் தொண்டையில் புண்களும் இரத்த கசிவும் ஏற்படும்

4. 6மிடம் புதனும் சுக்ரனும் சம்பந்தப்படுமானால்
          தொடர்ச்சியாக நாள் தோறும் இருமுவதால் இடுப்புக்கு கிழே இருக்கும் விதைபையில் உள்ள நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு பெரிதாக விதைபை வீங்கும் நிலை ஏற்படும்.


5. 6மிடம் புதனும் குருவும் சம்பந்தப்பட்டால்    
          தொடர்ச்சியாக இருமுவதால் இரைப்பு ஏற்படுவதால் மூச்சு வாங்க சிரமபடுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இதய கோளாறுகள் சிறுநீரக கோளாறுகள் ஈரல் பாதிப்பு ஏற்படும்.

6. 6மிடம் புதனும் ராகு கேதுவும் சம்பந்தப்பட்டால்
           சளிகளும் மோசமான கிருமி தொற்று நோய்களும் ஏற்படும் இத்துடுடன் சூரியனும் சேர்ந்திருந்தால் கிருமிகளால் மூளையும் பாதிக்கப்பட்டு கோமாவை ஏற்படுத்தும்

7. 6மிடம் புதனும் சனியும் சம்பந்தப்பட்டால்
          ஆஸ்துமா நோயாளிகள்  தொடர்ச்சியாக இருமிக் கொண்டும் தும்மி கொண்டும் இருப்பார்கள்  இப்படி தொடர்ச்சியான இருமல் தும்மலினால் உடல் உறுப்புகள் முழுவதும் அசைந்து கொண்டே இருக்கும். முக்கியமாக கழுத்தும் வயிறும் வயிற்றின் பின் பகுதியில் உள்ள முள் எழும்புகளும் ஆடிக் கொண்டே இருக்கும். இப்படி தொடர்ச்சியாக கழுத்து முள் எழும்புகளும் வயிற்றின் பின்பகுதியில் இருக்கும் முதுகு முள்ளெழும்புகளும் ஆடிக்கொண்டே இருப்பதானால் முள் எழும்புக் கிடையே இருக்கும் சவ்வு நசுங்கி பாதிப் படைவதும் தொடரும். கழுத்தில் முள்ளெழும்புக் கிடையே உள்ள சவ்வு பாதிப்படைந்தால் கழுத்து வலியும் ஏற்படும். ( கழுத்தில் இருக்கும் முள்ளெழும்புக்கிடையே இருந்துதான் மூளையில் இருந்து வரும் நரம்புகள் கைகளுக்கு போகின்றன. ) இதனால் கை வலியும் ஏற்படும் குறிப்பாக புஜத்தில் வலிக்கும். அடுத்து இடுப்பு பின்புறம் உள்ள முதுகு முள்எழும்பில் இருந்துதான் மூளையிலிருந்து வரும் நரம்புகள் கால்களுக்கு  செல்கின்றன. ஆகவே முதுகு முள் எழும்பில் இருக்கும் சவ்வு பாதிப் படைந்தால் கடுமையான இடுப்பு வலியும் ஏற்படும் சிலருக்கு தொடையிலும் வலி ஏற்படலாம்.


ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா